"சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும்" என்ற தனது பேச்சுகள், "இனப்படுகொலைக்கு அழைப்பு விடுப்பது" போல் திரிக்கப்பட்டு, தவறாக பரப்பப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
தனது தலைக்கு பத்து லட்சம் ரூபாய் விலை வைத்ததாக ஒரு சாமியார் கூறியதையும் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். இதுபோன்ற மிரட்டல்கள் தன்னை அச்சுறுத்தாது என்றும், தான் பேசிய கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.