பல்லடத்தில் மர்மமான முறையில் இறந்த தெரு நாய்கள்: விஷம் வைத்து கொல்லப்பட்டதா?

Mahendran

புதன், 3 செப்டம்பர் 2025 (20:53 IST)
திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் தெருநாய்கள் உயிரிழந்து கிடந்தன. இதுகுறித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கொடுத்த புகாரின் பேரில், நாய்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு, அவற்றின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
 
தெரு நாய்களின் தொடர் உயிரிழப்பு குறித்து அப்பகுதி மக்களிடமும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த பகுதியில் யாரோ வேண்டுமென்றே நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் தெரிவித்தனர். இதையடுத்து, நாய்கள் உயிரிழப்புக்கான காரணத்தை உடனடியாக கண்டறிய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
 
சமூக ஆர்வலர்களின் புகாரின் அடிப்படையில், உயிரிழந்த நாய்களின் உடல்களை மீண்டும் தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம், நாய்கள் விஷம் வைக்கப்பட்டதால் இறந்தனவா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியவரும். இதன் அடிப்படையில், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்