தமிழ்நாட்டில் 10 கி.மீட்டருக்கும் மேல் பயணம் செய்து பொது தேர்வெழுதும் மாணவர்களின் சிரமத்தை குறைக்க, புதிய தேர்வு மையங்களை அமைக்க அரசு தேர்வுகள் துறை இயக்குநர் சசிகலா உத்தரவிட்டுள்ளார். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இது குறித்த அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் மூலம், தேர்வுக்கு செல்லும் மாணவர்களின் பயண தூரம் குறைவதோடு, நேரத்தையும் மிச்சப்படுத்த முடியும்.