அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தனது வரலாற்றிலேயே மிக குறைந்த நிலையை தொட்ட பிறகு, இன்று 3) 9 காசுகள் அதிகரித்து ₹88.06 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது. உள்நாட்டு பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றம், கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு பலவீனமடைந்தது ஆகியவை இந்த உயர்விற்கு காரணங்களாகக் கூறப்படுகிறது.
இன்று வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் ₹88.15க்கு வர்த்தகத்தை தொடங்கியது. ஒரு கட்டத்தில் அதிகபட்சமாக ₹87.98 ஆகவும், குறைந்தபட்சமாக ₹88.19 ஆகவும் வர்த்தகமானது. இறுதியில், 9 காசுகள் உயர்ந்து ₹88.06 ஆக முடிந்தது.