அண்ணா பல்கலைகழகத்தில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி

Webdunia
புதன், 22 ஜூன் 2016 (12:12 IST)
அண்ணா பல்கலைகழக வளாகத்தில் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய 2 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர்.


 
 
அண்ணா பல்கலைகழக வளாகத்தில் உள்ள காற்று மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொட்டிக்கு பெயிண்ட் அடிப்பதற்காக தீபன் சங்கர், ரமேஷ் ஆகிய இருவரும் தொட்டிக்குள் இறங்கி உள்ளனர்.
 
அப்போது விஷவாயு தாக்கியதால் 2 பேருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபன் மற்றும் ரமேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
 
அவர்கள் பெயிண்ட் அடிப்பதற்கு இறங்கிய தொட்டியானது நீண்ட நாட்களாக பயன்பாடற்று இருந்ததாக கூறப்படுகிறது. இரண்டு பேர் இறந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்