தேசிய நல்லாசிரியர் விருது! தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு!

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (10:13 IST)
ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தின் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு இந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வாகியுள்ளனர்.



ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை எஸ்.எஸ்.மாலதி இருவரும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

செப்டம்பர் 5ம் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் இவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்