கொசுவை விரட்ட வீட்டுக்குள் போடப்பட்ட புகையால் மூச்சுத் திணறி இருவர் உயிரிழப்பு

வியாழன், 22 ஜூலை 2021 (18:50 IST)
கொசுவை விரட்ட வீட்டுக்குள் போடப்பட்டட புகையால் மூச்சுத்திணறி இருவர் உயிரிழந்தனர் 
 
சென்னையை சொக்கலிங்கம் இவர் மனைவி, மகள் மற்றும் பேரன் விஷால் ஆகியோருடன் வசித்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் அனைவரும் தூங்க சென்ற நிலையில் இன்று காலை வெகு நேரமாகியும் யாரும் எழுந்திருக்கவில்லை.
 
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது 4 பேரும் மயக்க நிலையில் இருந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் 
 
சொக்கலிங்கம் மனைவி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் விஷாலும் உயரிழந்ததாக தெரிகிறது.
 
இதுகுறித்த விசாரணையில் கொசு அதிகமாக இருந்ததால் வீட்டுக்குள் அடுப்புக்கரி மூலம் புகை போட்டதாகவும் வீடு முழுவதும் புகை இருந்ததால் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்