தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மீனவர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், தமிழக மீனவர்களின் கைது நடவடிக்கை தொடர்கதையாகி வரும் நிலையில், இன்று ராமேஸ்வரத்தை சேர்ந்த எட்டு மீனவர்களை மீண்டும் இலங்கை கடற்படை கைது செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.