கனிமொழிக்கு பதவி கொடுத்ததற்கு பயம் ஒன்று தான் காரணம்: கனிமொழி

புதன், 12 அக்டோபர் 2022 (17:01 IST)
கனிமொழிக்கு பதவி கொடுத்ததற்கு பயம் ஒன்று தான் காரணம் என டிடிவி தினகரன் பேசியுள்ளார்.
 
சமீபத்தில் கூடிய திமுக பொதுக்குழுவில் கனிமொழிக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் கனிமொழி மீதான பயம் காரணத்தினால் அவருக்கு துணை பொது செயலாளர் பதவியை முதல்வர் ஸ்டாலின் வழங்கி இருக்கிறார் என்றும் அவருக்கு பதவி கொடுக்காவிட்டால் திமுக இரண்டாகி  இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தவறு செய்யும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மவுனமாக இருப்பதாக குற்றம் சாட்டிய டிடிவி தினகரன், ‘ஜெயலலிதா இப்போது அமைச்சராக இருந்தால் உடனடியாக தவறு செய்யும் அமைச்சர்களை நீக்கி இருப்பார் என்று தெரிவித்தார். 
 

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்