சீன அதிபர் வருகை எதிரொலி: ரயில்களும் நிறுத்தப்படுகிறதா?

வியாழன், 10 அக்டோபர் 2019 (20:12 IST)
சீன அதிபர் ஜின்பிங் நாளை சென்னை வரும்போது கிண்டி வழித்தடத்தில் சிறிதுநேரம் ரயில்கள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை புறநகர், விரைவு ரயில்கள் பல்லாவரம் பகுதியில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு பிறகு அனுப்பப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

ஏற்கனவே சீன அதிபரின் வருகையை அடுத்து சாலை போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ரயில்களும் சிறிது நேரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சீன அதிபரின் வருகையால் பொதுமக்களுக்கு சில பிரச்சனைகள் இருந்தாலும் உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான சீனாவின் அதிபர் நம்மூருக்கு வருவது பெருமைக்குரிய விஷயமாகவே கருதப்படுகிறது

சீன அதிபரின் இந்திய வருகை வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாக கருதப்படுவதால் உலக மீடியாக்கள் சென்னையில் குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்