நாக்கை வெட்டிகொண்ட தொழிலாளி!

புதன், 1 செப்டம்பர் 2021 (17:15 IST)
ஒசூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர் தனது நாக்கை வெட்டிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரியில் வசித்து வருபவர் கட்டிடத் தொழிலாளி. இவர்  சில நாட்களாகவே தனிமையில் வசித்து வருவதாகத் தெரிகிறது.

இந்நிலையில், இன்று இவர் தனது நாவை அறுத்துக்கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் மகள், துண்டான நாக்கை எடுத்துக்கொண்டு அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.  அதைப் பார்த்த மருத்துவர்கள் ரத்தம் ஓட்டம் இல்லாததால் அதை இணைக்க முடியாது என கூறியுள்ளனர். மேலும், இனிமேல் முன்புபோல் சரளமாகக் பேசமுடியாது எனவும், தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்