இந்தக் கொள்முதலுக்காக HP, Dell, மற்றும் Acer ஆகிய மூன்று பெரிய நிறுவனங்களுக்கு எல்காட் ஒப்பந்த ஆணை வழங்கியுள்ளது.
மடிக்கணினிகளின் மாதிரி வடிவங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் இறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, முதல் கட்டமான 10 லட்சம் மடிக்கணினிகளை வரும் மார்ச் மாதத்திற்குள் கொள்முதல் செய்து மாணவர்களுக்கு விநியோகிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, தமிழக மாணவர்களிடையே டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்தி, தொழில்நுட்ப வசதிகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.