லிப்டில் சிக்கினார் முதல்வர் எடப்பட்டி பழனிச்சாமி: பெரும் பரபரப்பு

ஞாயிறு, 29 அக்டோபர் 2017 (21:09 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை விமான நிலைய லிப்டில் சிக்கியதால் விமான நிலைய வளாகமே பெரும் பரபரப்பில் இருந்தது.



 
 
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமானத்தில் செல்வதற்காக விமான நிலையம் சென்றார்.
 
அப்போது அவர் லிப்டில் சென்றபோது திடீரென லிப்ட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நின்றதால் லிப்டில் முதல்வர் பழனிச்சாமி சிக்கினார்.
 
இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் உடனடியாக லிப்டில் இருந்த முதல்வரை மீட்டனர். பின்னர் முதல்வர் மதுரைக்கு விமானம் மூலம் சென்றார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்