ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் இரண்டாக உடைந்த அதிமுக தற்போது மூன்றாக உடைய உள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி அணியும், ஓபிஎஸ் அணியும் மல்லுக்கட்டி வரும் சூழலில் இருவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளிக்க தனபால் தலைமையில் ஒரு அணி உருவாகி வருவதாக தகவல்கள் வருகின்றன.
ஏற்கனவே நமது தளத்தில் அதிகவில் உள்ள தலித் எம்எல்ஏக்கள் நடத்திய ரகசிய கூட்டம் குறித்து குறிப்பிட்டிருந்தோம். அதிமுகவில் உள்ள 28 தலித் எம்எல்ஏக்களும் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தி அதில் தமிழக அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்குப் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாதது பற்றி விவாதித்தூள்ளனர்.
இந்நிலையில் ஓபிஎஸ் அணியும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் இணைவது உறுதியானால், தலித் எம்எல்ஏக்கள் தனியாக போர்க் கொடி தூக்கத் தயாராகி விட்டார்கள். அவர்களை இயக்குவது சபாநாயகர் தனபால் தான் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.