குழந்தைக்கு வாங்கிக் கொடுத்த சாக்லெட்டில் பீடித்துண்டு ...மக்கள் அதிர்ச்சி

ஞாயிறு, 8 நவம்பர் 2020 (12:54 IST)
குழந்தைக்கு வாங்கிக் கொடுத்த சாக்லெட்டில் பீடித்துண்டு இருந்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

திண்டுக்கல் மாவட்டம் ஆரோக்கியமாதா தெருவில் வசித்து வருபவர் கமலக்கண்ணன். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பருடன் திண்டுக்கல் பேருந்தி நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு அவரது உறவினரின் குழந்தை வந்ததால் அவருக்கு 10 ரூபாய் சாக்லெட் வாங்கிக் கொடுத்த நினைத்து, சாக்லெட் கவரைப் பிரித்து குழந்தையிடம் சாக்லெட்டைக் கொடுக்க முயன்றபோது, அதில்  பாதிப் புகைத்த பீடித்துண்டு இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தானர்.

இதுகுறித்து கமலக் கண்ணன் கடைக்காரரிடன் கேட்டுள்ளார்,..பின்னர் உணவுப் பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த உணவுப் பாதுக்காப்பு அதிகாரிகள் அனைத்து சாக்லெட்டுகளையும் பறிமுதல் செய்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அந்தக் கடை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்