யாராக இருந்தாலும்.... சட்டத்தை மதிக்க வேண்டும் - பிரபல நடிகர் ’அட்வைஸ் ’

வெள்ளி, 6 மார்ச் 2020 (17:16 IST)
சிஏஏ ஆதரவு எதிர்ப்பு

ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அதை மதிக்க வேண்டும். போராட்டத்தை தூண்டிவிடக் கூடாது என பிரபல நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். 
 
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில்  நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது :
 
இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இதில், குறையுடைதாக தெரிந்தால், நேரடியாக பிரதமரையோ, தமிழக முதல்வரையோ சந்தித்து தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு சட்டம் ஏற்பட்டுவிட்டது என்றால் அதை மதிக்க வேண்டும். போராட்டத்தை தூண்டி விடக் கூடாது என தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்