ஆமைக்கறி நன்கு சமைக்காத மனைவியை கொன்ற கணவன்!

சனி, 22 அக்டோபர் 2022 (19:13 IST)
ஓடிஷாவில்  ஆமைக்கறி வறுவலில் ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவியைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓடிஷா மா நிலத்தில்  முதல்வர்  நவீன் பட் நாயக் தலைமையிலான  பிஜூ ஜனதா தல் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில்,  இங்குள்ள ஒரு பகுதியில், ஆமைக்கறி எடுத்து வந்த கணவர் ரஞ்சன் தன் மனைவி சாவித்ரியை சமைத்துக் கொடுக்கும்படி கூறியுள்ளார்.

அவர், ஆமைக்கறி வறுவலை நன்கு சமைக்காததால், இதுகுறித்து சாவித்ரியிடம் கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில், ஆத்திரமடைந்த ரஞ்சன் தன் மனைவியை கொலை செய்து, வீட்டின் பின் புறம் புதைத்துள்ளார்.

தம் மகளை நீண்ட நாட்களாக காணவில்லை என்று சாவித்ரியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பின், போலீஸார் விசாரித்ததில், ரஞ்சன் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்