புதுச்சேரியில் சட்டமன்ற வளாகம் கட்ட ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தடையாக இருப்பதாக சபாநாயகர் புகார் தெரிவித்திருந்த நிலையில், சட்டமன்ற வளாகம் கட்டி முடிக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் உறுதிப்பட கூறியுள்ளார்.
மேலும் புதிய சட்டமன்ற வளாகம் கட்ட ஆளுநர் தடையாக இருக்கிறார் என்று குற்றம் சாட்டிய சபாநாயகர் செல்வம் ஆளுநர் அருகில் இருக்கும் போது முதலமைச்சர், துணைநிலை ஆளுநரை காப்பாற்றும் விதமாக குறுக்கிட்டு பதில் அளித்ததால் ஆளுநர் -சபாநாயகர் மோதல் போக்கு தவிர்க்கப்பட்டது.