ராமஜெயம் கொலை வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்

வெள்ளி, 10 ஜூன் 2022 (16:42 IST)
கடந்த 2012ஆம் ஆண்டு அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் என்பவர் நடைபயிற்சி சென்ற போது கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்
 
இந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை 
 
இந்த நிலையில் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று 2-வது கட்ட விசாரணை அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் தாக்கல் செய்தனர்
 
மேலும் இந்த கொலை வழக்கு குறித்த விசாரணை நடத்தி அடுத்த கட்ட அறிக்கை தாக்கல் செய்ய நான்கு வார காலம் அவகாசம் அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்