தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட மோர் பந்தலை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றிய நிலையில், அதன் அருகில் திமுகவின் மோர் பந்தல் இருந்ததால், "இந்த மோர் பந்தலை ஏன் அகற்றவில்லை?" என தமிழக வெற்றிக்கழகத் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோடை காலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தண்ணீர் பந்தல், மோர் பந்தல் வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் அருகே விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மோர் பந்தல் வைக்கப்பட்டது.