மதுவிற்கு அடிமையான இளம்பெண்: போதையில் நடுரோட்டில் புரண்டதால் பரபரப்பு

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2016 (15:37 IST)
மதுரையை அடுத்த சமயநல்லூரைச் சேர்ந்தவர் மஞ்சுவிற்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்நிலையில், மேலூர் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் சாமி கும்பிடுவதற்காக குடும்பத்தினருடன் மஞ்சு வந்துள்ளார்.


 


கோயிலுக்கு சென்றவுடன் அவரின் குடும்பத்தினருக்கு தெரியாமல், மேலூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்து மது அருந்திய மஞ்சு, போதை தலைக்கேறியதில், தள்ளாட்டம் ஏற்பட்டு மேலூர் செக்கடி பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். பின்னர் நடக்க முடியாமல் ரோட்டிலேயே சாய்ந்து கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மஞ்சு மீது தண்ணீரை ஊற்றி போதையை தெளிய வைக்க முயன்றனர். அவரகள் முயர்ச்சி தோல்வியில் முடிந்ததை அடுத்து மஞ்சுவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த உறவினர்கள், கோபத்துடன் அப்பெண்ணை தங்கள் வீட்டுக்கு கூட்டிச் சென்றனர்.
அடுத்த கட்டுரையில்