வரும் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு

சனி, 12 ஆகஸ்ட் 2023 (18:43 IST)
தமிழ்நாட்டில் அரசே மதுபானங்களை டாஸ்மாக்கில் விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் அரசுக்கு வருமானம் வருகிறது.

இந்த நிலையில்,  மதுப்பிரியர்களுக்கு அரசு குறிப்பிட்டுள்ள நேரத்தில்,  மதுபானங்கள் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், வரும் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூட டாஸ்மாக் நிர்வாகம் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

தவறும் பட்சத்தில், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கபப்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்