ஏதாவது ஒரு படம் போடுங்க.. தியேட்டர் திறந்தா போதும்! – ரசிகர்கள் ஆர்வம்!

செவ்வாய், 10 நவம்பர் 2020 (08:41 IST)
கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டு நீண்ட காலத்திற்கு பிறகு இன்று திறக்கப்படுவது திரைப்பட விரும்பிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காலமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் கிட்டத்தட்ட 8 மாதங்கள் கழித்து இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. இதனிடையே திரைப்பட தயாரிப்பாளர்களோடு திரையரங்க உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட விபிஎஃப் கட்டணம் தொடர்பான விவகாரத்தால் புதிய படங்கள் வெளியிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் முன்னதாக வெளியான சில படங்கள் மறுபடியும் திரையிட திரையரங்குகள் முடிவு செய்துள்ளன. தங்களிடம் உள்ள பெரிய நடிகர்களின் முந்தைய படங்களை மறு திரையிடல் செய்ய இருப்பதாக தெரிகிறது. புதிய படங்கள் வெளியாகாவிட்டாலும் முக்கிய நடிகர்களின் மாஸ்டர் பீஸ் படங்கள் மீண்டும் வெளியாகலாம் என்பதால் அதையாவது திரையரங்குகளில் காண வேண்டும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்