தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெயில் சுட்டெரிக்கும்..! வானிலை மையம் எச்சரிக்கை..!!

Senthil Velan

புதன், 13 மார்ச் 2024 (15:27 IST)
தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 13.03.2024 முதல் 19.03.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது,
 
தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது
 
வருகிற 17-ம் தேதி வரை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

ALSO READ: மீண்டும் எம்.எல்.ஏ. ஆகிறார் பொன்முடி..! உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் வெளியீடு..!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை,  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்