காற்றின் திசைவேகத்தில் மாறுபாடு - இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

திங்கள், 31 ஜனவரி 2022 (12:45 IST)
தமிழகத்தில் கிழக்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்திலும் புதுவையிலும் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
தமிழகத்தின் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மழை பெய்யும் என்றும் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் என்றும் முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்