தமிழகத்தில் 16 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும்!

செவ்வாய், 12 அக்டோபர் 2021 (12:45 IST)
தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 
 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக  தமிழகத்தில் அக்டோபர் 16 ஆம் தேதி வரை தொடர் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
மேலும் இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்