கோடை விடுமுறை முடிந்து, ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் "ஜூன் 9ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும்" என ஒரு வதந்தி பரவி வருகிறது. இதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அந்த விளக்கத்தில், திட்டமிட்டபடி ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அது மட்டுமின்றி, பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டி நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஜூன் ஒன்பதாம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும் என்பது முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.