ஆளுனரை சந்திக்கிறார் முதல்வர்: நீட் விலக்கு மசோதா குறித்து பேச்சுவார்த்தை!

செவ்வாய், 15 மார்ச் 2022 (07:45 IST)
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசு தாக்கல் செய்த நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் சட்டமன்ற சிறப்பு கூட்டம் கூடி நீட் விலக்கு மசோதாவை இயற்றி ஆளுநருக்கு அனுப்பி உள்ளது
 
இந்த மசோதாவிற்கு ஆளுநரின் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது
 
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி இந்த சந்திப்பு நடக்கும் என்றும் கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்