இலங்கைக்கு சென்ற பிரதமர், மீனவர் பிரச்சனை தொடர்பாக எந்த முன்னெடுப்பும் எடுத்ததாக தெரியவில்லை என்றும், 97 மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் தாயகம் திரும்பும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாதது ஏமாற்றமே என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தபோதிலும், மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல் தொடர்கிறது என்றும், மத்திய அரசு எப்படி நடந்து கொண்டாலும் தமிழக அரசு மீனவர்களுடன் தான் இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.