மீண்டும் மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்யும் சிங்கள படை.. இன்று 7 பேர் கைது..!

Mahendran

சனி, 9 ஆகஸ்ட் 2025 (14:51 IST)
இலங்கை கடற்படையினரின் தொடர்ச்சியான அத்துமீறல் நடவடிக்கையில், ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் போக்கு தமிழக மீனவ சமூகத்தினரிடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள வடக்கு மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
 
இலங்கை கடற்படையின் இந்த அராஜகப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த மாதம்கூட, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார். 
 
மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், அவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், தமிழக மீனவ சமூகத்தின் வாழ்க்கையை மிகவும் பாதிக்கின்றன. இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே மீனவர்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்