தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை

வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (11:43 IST)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை முதல் 3 நாள்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது. அதோடு இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாம். 
 
அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்