ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு..!

திங்கள், 10 ஏப்ரல் 2023 (15:10 IST)
ஸ்டெர்லைட் ஆலை வழக்கை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தடையை நீக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது அரசு அனுமதிக்காத எந்த ஒரு ஆலையையும் அனுமதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். 
 
இதையும் அடுத்து  ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு தொடர்பாக வேதாந்த நிறுவனத்தின் இடைக்கால மனு மீதான விசாரணை மூன்று வாரங்களுக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்