கர்நாடகாவுக்கு அணை கட்ட அனுமதி: தமிழக மனு தள்ளுபடி!

வியாழன், 14 நவம்பர் 2019 (11:39 IST)
தென்பெண்ணை ஆற்றின் கிளை ஆறான மார்கண்டேய நதியில் அணைக்கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கியது உச்ச நீதிமன்றம்.

கர்நாடகாவில் தொடங்கி கிருஷ்ணகிரி வழியாக கடலூர் வரை செல்கிறது தென்பெண்ணை ஆறு. இதன் கிளை ஆறான மார்க்கண்டேய நதியில் அணை கட்டுவதற்கு கர்நாடகா திட்டமிட்டது. இதனால் தமிழகத்துக்கு நீர்வரத்து குறையும் என கர்நாடகா அணை திட்டத்திற்கு எதிராக தமிழகம் வழக்கு தொடர்ந்தது.

இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கர்நாடகாவுக்கு அணை கட்ட அனுமதி அளித்து தமிழகத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்