பக்தியும் இல்லை, ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. கந்தசஷ்டி விவகாரம் குறித்து சுப.வீரபாண்டியன்

ஞாயிறு, 19 ஜூலை 2020 (17:40 IST)
முகக் கவசம் பற்றிப் பேச வேண்டிய நேரத்தில், வேறு கவசம் பற்றியே பேசுவது ஏன்? பக்தியும் இல்லை, ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. தேர்தல் நெருங்குவதால், திமுக வின் மீது அவதூறு பரப்புவது மட்டுமே நோக்கம். 
 
முருகனின் கந்த சஷ்டி கவசத்தை கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் அவமதிப்பு செய்தது குறித்த தகவல்கள் அவ்வப்போது பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளிடம் இருந்தும் திரையுலக பிரபலங்களிடம் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வந்தாலும் திமுக தரப்பில் இருந்து மிகவும் தாமதமாகவே கண்டனம் வந்தது. அதுவும் திமுக தலைவர் முகஸ்டாலின் அவர்களோ அல்லது உதயநிதி ஸ்டாலின் அவர்களோ கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதும் அக் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி மட்டுமே கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் திமுக ஆதரவாளரான சுப வீரபாண்டியன் உள்பட ஒரு சிலரும் கருப்பர் கூட்டத்திற்கு திமுகவுக்கும் என்ன சம்பந்தம் இல்லை என்று பேட்டி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சுப வீரபாண்டியன் தனது டுவிட்டரில் இந்த விவகாரம் குறித்து ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
முகக் கவசம் பற்றிப் பேச வேண்டிய நேரத்தில், வேறு கவசம் பற்றியே பேசுவது ஏன்? பக்தியும் இல்லை, ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. தேர்தல் நெருங்குவதால், திமுகவின் மீது அவதூறு பரப்புவது மட்டுமே நோக்கம். என்று கூறியுள்ளார். இவருடைய இந்த பதிவுக்கு பல்வேறு விதமான கமெண்ட்டுக்கள் குவிந்து வருகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்