இன்று ஒரே நாளில் மூன்று திமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

ஞாயிறு, 19 ஜூலை 2020 (17:22 IST)
இன்று காலை கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் ஓசூர் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ரு வருவதாகவும் வெளிவந்த செய்தியை பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்று மேலும் இரண்டு திமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்தி வெளியானது
 
இதனையடுத்து சற்றுமுன் ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ ஆர்.காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 திமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும், தமிழகத்தில் இதுவரை 16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்