ஹிந்தி திணிப்பு முறியடிப்பு- வெங்கடேசன் எம்.பி டுவீட்

புதன், 6 அக்டோபர் 2021 (23:34 IST)
தமிழகத்தில் இயங்கும் 14 ஆயிரம் அஞ்சலகங்களில் பயன்படுத்தப்படும் சுமார் 40 க்கும் மேற்பட்ட படிவங்கள் அனைத்தும் தமிழில் இருக்கும் என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழகத்தில் இயங்கும் 14 ஆயிரம் அஞ்சலகங்களில் பயன்படுத்தப்படும் சுமார் 40 க்கும் மேற்பட்ட படிவங்கள் அனைத்தும் தமிழில் இருக்கும். ஒரு மாத காலத்துக்குள் முழுமையாக நடைமுறைக்கு வரும். தபால் அலுவலகம் தமிழ் அலுவலகமாக இருப்பதை உறுதிசெய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்