பொதுவாக, முதலாம் ஆண்டு மாணவர்களைத்தான் சீனியர் மாணவர்கள் ரேக்கிங் செய்வார்கள் என்ற நிலையில், கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் சீனியர் மாணவரை 13 முதலாம் ஆண்டு மாணவர்கள் அடித்து டார்ச்சர் செய்த விவகாரத்தில் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை-பாலக்காடு சாலையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில், சீனியர் மாணவர் ஒருவர் பணம் திருடியதாக குற்றச்சாட்டப்பட்ட நிலையில், அவரை அடித்து உதைத்து கட்டிப்போட்டு 13 முதலாம் ஆண்டு மாணவர்கள் கொடுமைப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது போன்ற சம்பவங்களை தடுக்க, கல்லூரி நிர்வாகங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்படுகிறது.