காங்கிரஸ் கட்சிக்கும் நீட் தேர்வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.. செல்வப்பெருந்தகை

Mahendran

செவ்வாய், 11 ஜூன் 2024 (19:05 IST)
காங்கிரஸ்-க்கும் நீட் தேர்வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும், நீட் தேர்வை கொண்டு வந்தது பாஜக தான் என்றும்,  காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசினார்
 
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். அதில் அவர் பேசியபோது காங்கிரஸ்-க்கும் நீட் தேர்வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும், நீட் தேர்வை கொண்டு வந்தது பாஜக தான் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
 
நீட் தேர்வு என்பது மக்கள் மீது திணிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கை என்றும், நீட் தேர்விற்கு முதலமைச்சர்  தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் கூறினார். 
 
இந்த நிலையில் நீட் தேர்வு குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தான் நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடினார் என்று நெட்டிசன்கள் செல்வப்பெருந்தகை பேச்சுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்   
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்