பேருந்து துளையில் இருந்து மாணவி விழுந்து பலியான வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை

புதன், 25 ஜனவரி 2023 (16:46 IST)
கடந்த 2012 ஆம் ஆண்டு பேருந்து துளையிலிருந்து மாணவி விழுந்து பலியான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேர்களையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
 
கடந்த 2012 ஆம் ஆண்டு தாம்பரம் சியோன் பள்ளி மாணவி சுருதி என்பவர் பேருந்து துளையிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக பலியானார். 
 
இது குறித்த வழக்கில் எட்டு பேர்கள் குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்தது
 
செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் இந்த வழக்கில் குற்றம் தாட்டப்பட்ட எட்டு பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி காயத்ரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்