5.19 கோடி பாடப்புத்தகங்கள் தயார்: பள்ளி திறக்கும் அன்றே வழங்க ஏற்பாடு!

Webdunia
வியாழன், 26 மே 2022 (14:09 IST)
5.19 கோடி பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் இந்த பாடப்புத்தகங்கள் பள்ளிகள் திறக்கும் அன்றே மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
வரும் ஜூன் 13ஆம் தேதி முதல் வகுப்புகள் வாரியாக பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக வந்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் 2022 - 23ஆம் கல்வி ஆண்டுக்கான புத்தகம் அச்சடிக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அனைத்துப் புத்தகங்களும் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது
 
மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 5.19 கோடி பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் பள்ளி திறக்கும் முதல் நாளில் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்