சசிகலா புஷ்பாவை கைவிட்ட கணவர்: அம்மா தான் எனக்கு கடவுள்!

செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (09:27 IST)
அதிமுக மீதும் முதல்வர் ஜெயலலிதா மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்து வரும் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவிற்கு அவரது கணவரே ஆதரவு கொடுக்கவில்லை.


 
 
பதவியை ராஜினாமா செய்ய எனது கட்சி தலைமை என்னை வற்புறுத்துகிறது. முதல்வர் ஜெயலலிதா என்னை கன்னத்தில் அறைந்தார். என்னை ஒரு அடிமையை போல் நடத்தினார்கள். எனது உயிருக்கு மாநில அரசால் ஆபத்து உள்ளது. என்னை காப்பாற்றுங்கள், பாதுகாப்பு தாருங்கள் என பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்தார் சசிகலா புஷ்பா.
 
சசிகலா புஷ்பாவுக்கு, திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்தாலும், அவரது கணவர் லிங்கேஸ்வரன் ஆதரவு கொடுக்கவில்லை. இது குறித்து கூறிய அவர், என் மனைவி அரசியல் செய்கிறார் என்றுமே அம்மாதான் எனக்கு கடவுள். இதற்கும் எனக்கும் துளி கூட சம்மந்தம் இல்லை என கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்