ஜெயலலிதாவை சசிகலா செல்லமாக எப்படி அழைப்பார் என தெரியுமா?

Webdunia
சனி, 17 டிசம்பர் 2016 (13:39 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். வீரப் பெண்மணியாக திகழ்ந்த ஜெயலலிதாவை மரணம் கூட 75 நாட்கள் போராடி தான் வென்றது. ஜெயலலிதாவுடன் பல ஆண்டு காலம் வாழ்ந்தவர் அவரது நெருங்கிய தோழி சசிகலா.


 
 
சில நேரங்களில் சசிகலாவை போயஸ் கார்டனை விட்டு ஜெயலலிதா வெளியே அனுப்பினாலும், அவரால் சசிகலாவை பிரிந்து இருக்க முடியாமல் மீண்டும் சேர்த்துக்கொண்டார். அப்படி ஒரு பாசப்பிணைப்பு என்கிறார்கள்.
 
இந்நிலையில் ஜெயலலிதாவை சசிகலா ‘குட்டிப்பையா’ என செல்லமாக அழைப்பாராம் என்ற தகவல் வந்துள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாளும் அவருடன் இருந்தது சசிகலா தான்.
 
ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு வருவதற்கு ஒரு நாள் முன்பு அவரது அறைக்குள் சென்ற சசிகலா ஜெயலலிதாவை பார்த்து, குட்டிப்பையா எல்லாம் சரியாயிடும்டா என சொல்லி கொஞ்சிக் கொண்டு இருந்தாராம். அந்த நேரத்தில் மருத்துவர்கள் அங்கு வர சசிகலா அமைதியாகிவிட்டார். பொதுவாக சசிகலா ஜெயலலிதாவை குட்டிப்பையா என்றுதான் அழைப்பார் என மருத்துவர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 
அடுத்த கட்டுரையில்