நடராஜனை கட்டிப்பிடித்து கதறிய சசிகலா

புதன், 15 பிப்ரவரி 2017 (21:07 IST)
சிறை அறைக்குச் செல்லும் முன் சசிகலா தனது கணவர் நடராஜனை கட்டிப்பிடித்து சசிகலா அழுததாக கூறப்படுகிறது.


 

 
நேற்று உச்ச நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் உறிது செய்யப்பட்டது. இதையடுத்து இன்று சசிகலா மற்றும் இளவரசி பரப்பன அக்ரஹார சிறை வாளாகத்தில் சரணடைந்தனர்.
 
சிறையில் அடைக்கப்படும் முன் 15 நிமிடம் தன் உறவினர்களிடம் சசிகலா பேசினார். அப்போது தனது கணவர்   நடராஜனை கட்டிப்பிடித்து சசிகலா அழுததாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்