மே தினத்தை கொண்டாடும் குடிமகன்கள்: ஒரே நாளில் ரூ.252 கோடிக்கு மதுவிற்பனை!

ஞாயிறு, 1 மே 2022 (12:14 IST)
மே தினத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
 
இதனையடுத்து நேற்றே குடிமகன்கள் டாஸ்மாக் கடைகள் முன் குவிந்து மது வகைகளை வாங்கி குவித்தனர்
 
இதனையடுத்து நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் சுமார் ரூ.252.34 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது
 
குறிப்பாக நேற்று மிக அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 54.89 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது. சென்னை மண்டலத்தில் 52.28 கோடி ரூபாய்க்கும் சேலத்தில் 48.67 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.49.78 கோடிக்கும் கோவையில் ரூ.46.72 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்