ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்தோரிடம் ரூ.35.47 கோடி அபராதம்!

புதன், 13 அக்டோபர் 2021 (22:22 IST)
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்தோரிடம்  இருந்து ரூ.35.47 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வேயில் டிக்கெட் விதிமீறலில் ஈடுபட்ட சுமார் 7.12 லட்சம் பேரிடம் இருது ரூ. 35.47 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும்,  இத்தொகையில் அதிகபட்சமாக சென்னை கோட்டத்தில் மட்டும் ரூ.12.78 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் கொரொனா கால கட்டுப்பாட்டுகளை மீறி ரயில்களில் மாஸ்க் அணியாமல்  பயணித்தவர்களிடம் இருந்து ரூ.1.62 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்