பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு...ரியல் ஹீரோ இவர்

புதன், 14 ஜூலை 2021 (17:35 IST)
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவுள்ளார் கோவையைச் சேர்ந்த நரேஷ் கார்த்திக் என்ற கோவையைச் சேர்ந்த இளைஞர். இவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, தீய பழக்கங்களான போதை , குழந்தைத் தொழிலாளர், உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு  உதவிக்கரம் நீட்டவுள்ளார் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் நரேஷ் கார்த்திக்.

இவர் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவுள்ளார். அதில், கல்வி உதவி, வேலை வாய்ப்பு வழிகாட்டுதலை மேற்கொண்டு சுமார் 1000 குழந்தைகளை அவர் இதுவரை மீட்டுள்ளார். அவரது சேவைக்கு மக்கள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்