அந்த பொண்ணுக்கு வாய் அதிகம், அதான்... விழுப்புரம் கொடூரர்கள் பகீர் வாக்குமூலம்

புதன், 13 மே 2020 (11:46 IST)
சிறுமியை எரித்தது ஏன் கைதான முருகன், கலியபெருமாள் ஆகிய இருவர் போலீசாரிடம் வாக்குமூலம். 
 
இரு குடும்பத்திற்கு இடையே ஏற்பட்ட முன்பகை காரணமாக விழுப்புரத்தில் சிறுமி ஒருவர் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே முருகன், கலியபெருமாள் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
 
விசாரணையின் போது இருவரும் பினவருமாறு வாக்குமூலம் அளித்துள்ளனர். சிறுமியைத் தீயிட்டு எரித்தது நாங்கள்தான். எங்களுக்கு பல வருடங்களாக முன் விரோதம் இருக்கிறது. இதனால் நிறைய சண்டைகள் நேர்ந்துள்ளது.
 
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு சிறுமியின் தந்தை ஜெயபால் கடைக்குப் பீடி வாங்க வந்த பிரவீன்குமார் ஜெயபாலின் பெரிய‌ மகனைத் தாக்கியுள்ளார். இந்த பிரச்சனை எங்களால் என நினைத்த ஜெயபால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
 
எனவே எங்கள் மீது புகார் கொடுக்க செல்கிறாயா என்ற கோபத்தில் ஜெயபால் வீட்டிற்குச் சென்றபோது கடையில் அந்த சிறுமி இருந்தால். சிறுமி முன்னதாகவே எங்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளுக்கு அதிகமாக வாய் பேசும். 
 
ஆகவே, அச்சிறுமியின் வாயடைத்துக் கட்டிப்போட்டு எரித்துவிட்டோம் என வாக்குமூலம் அளித்தாக விசாரணை மேற்கொண்ட போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்