5 ஆயிரத்தை நெருங்கிய சென்னை பாதிப்புகள் – மண்டல நிலவரம்!

புதன், 13 மே 2020 (10:46 IST)
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் கிட்டத்தட்ட ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

மூன்றாம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தலைநகரான சென்னையில் மட்டும் பாதிப்புகள் 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

சென்னையில் இதுவரை மொத்தமாக 4,882 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 814 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக ராயபுரத்தில் 828 பாதிப்புகளும், கோடம்பாக்கத்தில் 796 பாதிப்புகளும், திருவிக நகரில் 622 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. மற்ற பகுதிகளில் 500க்கும் குறைவான பாதிப்புகள் உள்ளன.

தற்சமயம் பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மெல்ல குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்