சென்னையின் வண்ணாரப்பேட்டை விஜயராகவன் தெருவில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக சிதிலமடைந்த கட்டடத்தில் இயங்கி வந்த நியாயவிலை கடையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், விற்பனையாளரான ஜெயந்தி படுகாயம் அடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.