திறக்கப்படாத டாஸ்மாக் கடை; துளையிட்டு கொள்ளை! – ராணிப்பேட்டையில் பரபரப்பு

புதன், 9 ஜூன் 2021 (10:26 IST)
தமிழகத்தில் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடையில் துளையிட்டு கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் பலர் மற்ற மாநிலங்களுக்கு எல்லை தாண்டி சென்று மதுபானங்கள் வாங்குவதும், பலர் முறைகேடாக மது கடத்தி வந்து தமிழகத்திற்கு அதிக விலைக்கு விற்க முயல்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் நந்தியாலயம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை இன்று ஊரடங்கால் பூட்டப்பட்டிருந்துள்ளது. அந்த டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்ட மர்ம நபர்கள் உள்ளே புகுந்து ரூ.1.5 லட்சம் மதிப்பிலான மதுபானங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்